Latest Posts



Continue Reading
ஆர்ஓ முறையில் சுத்திகரிக்கும்  குடிநீர் உடலுக்கு கேடு என்பதால்  ஆரோ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு  இன்னும் இரண்டு மாதத்திற்குள் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது . நிலத்தடியில் இருந்து குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீரை  ஏராளமான மக்கள் வீட்டிலேயே ஆர் ஓ  முறையில் சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர் .  இந்நிலையில் ஆர் ஓ குடிநீர் சுத்திகரிப்பு தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து நிபுணர்கள் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை ஒன்றை  தாக்கல் செய்தது அதில் ஒரு லிட்டர் குடி நீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும் வகையில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆர் ஓ எந்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது .

ஏனென்றால் ஆர் ஓ முறையால் பெறப்படும் குடிநீர் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் ,   சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது என நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது எனவே இதைத் தடை செய்ய வேண்டும் என்றும் இந்த உத்தரவை தெளிவாக அமல்படுத்த வேண்டும்  என்றும் மத்திய பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது  .  இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை செயல்படுத்த குறைந்தது 4 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது . குழாய் மூலம் பெறப்படும் நிலத்தடி நீரை சுத்திகரிப்பு என்ற பெயரில் எல்லாவிதமான தாதுக்களையும் நீக்கி விடுவதால் அந்தத் தண்ணீர் குடிக்க உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணமாக உள்ள நிலையில்,
வனத்துறை சார்பில் தாக்கல் செய்துள்ள பதில்  ஆவணத்தில் கூறும்போது,   சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் வனத்துறை உறுதியாக இருக்கிறது,  அறிவிப்பாணை வெளியிட்டு அதை செயல்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது . எனவே  இத்தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தி கருத்துக்கள் ,  ஆலோசனைகளைக்  கேட்க இரண்டு மாத கால அவகாசம் போதுமானதாக இருக்காது , மேலும் இதற்கு சட்டம் மற்றும் நீதித்துறை இடமிருந்து ஒப்புதலை பெற வேண்டும் எனவே 4 மாத கால அவகாசம் இருந்தால் இந்த உத்தரவை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது .
Continue Reading
நெல்லை அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீரென்று இறந்தது. இதையடுத்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, 
நெல்லை அருகே உள்ள தருவை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய 1½ வயது மகள் கயல்விழி. இவளுக்கு சளி தொல்லை இருந்துள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதையொட்டி கயல்விழிக்கும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கயல்விழிக்கு சளி தொல்லை அதிகரித்தது. பின்னர் மூச்சு திணறலும், வயிற்றுபோக்கும் ஏற்பட்டது.

இதனால் குழந்தை கயல்விழியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கயல்விழி இரவு பரிதாபமாக இறந்தாள். இதுபற்றி அறிந்த கயல்விழியின் உறவினர்கள் நேற்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால்தான் குழந்தை இறந்து விட்டதாக குற்றம் சாட்டினர். மேலும், குழந்தையின் சாவுக்கு உரிய காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீரென இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
2020-01-20@ 21:17:53

காட்டுமன்னார்கோவில்: போலியோ சொட்டு மருந்து போட்டதும் ஒரு வயது குழந்தை இறந்தது காட்டுமன்னார் கோவிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரி புத்தூர் அருகே பண்ணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது குழந்தை ஹரீஷூக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்காக டி.மணலூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்றனர். போலியோ சொட்டு மருந்து போட்டதும் வீட்டுக்கு வந்தனர்.

இதன்பிறகு சிறிது நேரத்தில் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனடியாக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். இதனால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காலாவதியான  போலியோ சொட்டு மருந்துதான் காரணம் என பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.


Continue Reading
தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதில், இந்த மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளி வந்திருக்கிறது.


மக்கள் அந்த மருத்துவமனை செல்ல அச்சப்பட்டு வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. அதனடிப்படிடையில், இன்று தஞ்சையில் மருத்துவமனை முதல்வர் குமுதா லிங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது, “ தஞ்சை அரசு மருத்துவமனையில் 16,421 குழந்தைகள் கடந்த ஆண்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் 995 குழந்தைகள் இறந்ததாக கூறும் தகவல் உண்மை தான் இரண்டிலிருந்து மூன்று சதவிகிதம் குழந்தைகள் இறப்பதை தவிர்க்க முடியாது. “ என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ”கர்ப்பத்திலேயே இறந்தது 322 குழந்தைகள், இதயம், மூளை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகள் 200,பிற இடங்களில் சிகிச்சைக்கு கொண்டு சென்று தாமதமாக தஞ்சை இராசா அரசு மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120, அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 353” என 995 குழந்தைகளின் இறப்புக்கும் புள்ளி விபரம் தெரிவித்தார் மருத்துவமனை டீன்.

மேலும், “ 995 குழந்தைகள் இறந்ததால் மருத்துவமனை நிர்வாகம் சரியில்லை என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3% நோயாளிகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும், மருத்துவ துறையில் இது இயல்பான எண்ணிக்கை தான்.” என்று அவர் கூறிப்பிட்டுள்ளார்.
மேலும்,“தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உயிரிழப்பு குறித்த தகவலைப் பெற்றால், அதில் வெறும் எண்கள் மட்டுமே கிடைக்கும். அதன் மூலம் மருத்துவமனையின் தரத்தை தீர்மானிக்க முடியாது. இதுதொடர்பாக வெளியாகும் செய்திகளால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்” என்றும் குமுதா லிங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி நாகை, திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading
மதுரையை சேர்ந்த ஹீலி இவர். ஒராண்டுக்கு மேலாக, உடல் தொந்தரவுகளின் போது அவ்வப்போது சிகிச்சை எடுத்துக் கொள்வார். இரண்டு வாரங்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் இடுப்பு வலிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஒரிரு நாட்களில் அந்த தொந்தரவில் இருந்து மீண்டார். கடந்த இரண்டு நாட்களாக சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த வலி வேதனை, அவருக்கு இன்று காலை சிகிச்சை அளித்தேன். மாலை சிறுநீர் கழிக்கும் போது பிரசவ வலியுடன் ஒரு கல் வந்ததாக செய்தி அனுப்பியிருக்கிறார். அந்த கல் உங்கள் பார்வைக்கு...
-
அருண் குமார்
Continue Reading
காலையில் பள்ளிக்கு அனுப்பி வைத்த குழந்தை, மாலையில் பிணமாக!
மரு. கோ. பிரேமா BHMS,


13/9/2019 அன்று ஒடிசா மாநிலத்தில் பள்ளிகளின் மூலம் தொண்டை அடைப்பான் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.



ரூர்கேலா எனும் இடத்தில் பள்ளிமாணவர்களுக்கு TD தடுப்பூசி 10வயது மற்றும் 16வயது குழந்தைகள், முக்கியமாக பெண்குழந்தைகளுக்கு போடுவதென திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் இப்பள்ளியில் எந்த பெற்றோரிடமும் சம்மதம் வாங்கவில்லை. இன்று இப்படியொரு திட்டம் நடைபெறவிருப்பதே பெற்றோரிடம் சொல்லப்படவில்லை.
9 வயதே ஆன சுமன்ஜித் பிரதான் , தடுப்பூசி போட்டு சிலமணிநேரங்கள் கழித்து மயங்கி விழுந்து இறந்துவிட்டான்.
பெற்றோர் சம்மதம் பெறாமல் எப்படி இப்படியொரு பாதகமான மருத்துவக்குறுக்கீடை இவர்கள் நடத்துகிறார்கள்?
இதுல நம்மூரு அதிகாரி தடுப்பூசி கட்டாயம்னு கதை அளந்துவிட்டுருக்காரு RTIல. சட்டவிரோதமான இப்பதிலுக்கு ஞாயமாக அவர்மீது வழக்குகூட போடலாம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைப்பேறு என்பதே பலருக்கு எட்டாக்கணியாக இருந்துவருகிறது.
பெற்றாலும் ஒன்றோ இரண்டோ தான்.
இப்படி தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை , ஆரோக்கியமான குழந்தையை ஓர் அரசுத்திட்டம் , ஒரு மருத்துவக்குறுக்கீடு, பெற்றோர் சம்மதமில்லாமல்/அவர்களது மறுப்பைமீறி கொண்றுகுவிக்கத்தானா?
எத்தனை கோடி இழப்பீடு கொடுத்தாலும் இறந்த பிள்ளைக்கு ஈடாகுமா? அந்த இழப்பீடை கூட இதுவரை எந்த மாநில அரசும் தந்ததில்லையே?
PC and news sharing: Jagannath Chatterjee
Continue Reading