6. இந்தியாவில் சத்தமில்லாமல் அறிமுகமாகும் வயதானவர்களுக்கான தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒரு பெரியவரின் மரணம். - Dr. G. Prema BHMS

தடுப்பூசி மரணம் # 6
Vaccine death #6
"பாப்பாவுக்கு மட்டுமல்ல, தாத்தாவுக்கும் தான்!!"
மரு. கோ. பிரேமா BHMS,
"பாப்பாவுக்கு மட்டுமல்ல, தாத்தாவுக்கும் தான்!!"
இது என்னனு பாக்குறீங்களா?
இதுதான் பெரியவர்களுக்கான தடுப்பூசி விளம்பரம்.
இந்தியாவிலும் பெரியவர்களுக்கான தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு பெருமளவில் வணிகம் பார்க்க இருக்கிறார்கள்.
இனி அலுவலகங்களில் தொழிற்சாலையில் பள்ளிகளை போன்ற தடுப்பூசி சீட்டு கேட்பார்கள்.
இப்போதைக்கு வயதானவர்களுக்கு அதாவது Geriatric Vaccines மட்டும் இந்தியாவில் அதிவேகமாக அறிமுகப்படுத்தப்படுகிறது!
இது நமக்கு நல்ல விஷயம். நான் வரவேற்கிறேன்.
ஏன் தெரியுமா?
இதுநாள் வரை தடுப்பூசியினால் ஏற்படும் குழந்தைகள் மரணங்களை , குழந்தைகளில் ஏற்படும் ஒவ்வாமை நோய்களையும் , புற்றுநோய்களையும், சர்க்கரை நோயையும், ஆட்டிசம், மனவளர்ச்சியில் குறைபாடு, ஆற்றல்குறைபாடு போன்ற பல நோய்களை 'தற்செயல்' என்ற ஒற்றை வார்த்தையில் ஒதுக்கி தள்ளி வந்தார்கள்.
இது போன்ற தடுப்பூசியினால் ஏற்படும் மரணங்களையும் நோய்களையும் பெரியவர்களுக்கும் ஏற்படும் போது, தடுப்பூசியின் கொடூரமுகத்தை இனிமேலும் எந்த 'தற்செயலில்' ஒளித்து மறைக்க முடியும் என பார்ப்போம்.
மத்தியபிரதேசத்தில் உள்ள கோசல்பூரில் உள்ள ஒரு பெரியவருக்கு தடுப்பூசி போட, சில நொடிகளில் அவர் மரணித்துவிட்டார். இது பெரும் சலசலப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது.
இனி இது போன்ற பல செய்திகளை காணலாம்.
தடுப்பூசியின் பாதகங்களை உணர்ந்து பல பெற்றோர்களிடத்தில் தடுப்பூசி மறுப்புணர்வு அதிகரித்து வரும் இந்நேரத்தில் வயதானவர்களுக்கான தடுப்பூசி அறிமுகம், தடுப்பூசி வணிகத்தை சரிகட்டும்.
நல்ல வணிக யுக்தி.

 

0 comments:

Post a Comment